அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைகிறது!– இலங்கை அரசாங்கம் நம்பிக்கை

589
அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால், இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்களுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த கூற்றை மேற்கோள்காட்டியே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கா தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

 

SHARE