அசத்தும் அஸ்வின்.. கவனம் ஈர்க்கும் ஹேராத்: கருத்து தெரிவித்த முரளிதரன்

352
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.

இவர் தற்போது கிரிக்கெட்டில் அசத்தி வரும் சுழற்பந்து வீச்சாளர் பற்றி ஐபிஎல் டி20 இணைய தளத்தில் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின், ஹர்பஜன்சிங், பாகிஸ்தானின் சையது அஜ்மல், இலங்கையின் ரங்கனா ஹேராத் போன்ற தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

இலங்கை பந்து வீச்சாளர்களில் ஹேராத் கவனம் ஈர்க்கிறார். பாகிஸ்தானின் சையது அஜ்மல் பந்து வீச்சில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. ஆனால் அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார்.

இந்தியாவை பொறுத்தளவில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்காக அவர் தொடர்ச்சியாக ஆடி வருகிறார். ஹர்பஜன்சிங்கும், தனது டச்சில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

ஐதராபாத் அணியில் காஷ்மீரை சேர்ந்த பர்வேஸ் ரசூல் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார். இருப்பினும் இன்னும் சில போட்டிகளை உற்று பார்க்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடர் திறமையானவர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்றும் இதில் கவனம் ஈர்ப்பவர்களுக்கு அந்தந்த நாடுகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் எனவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE