அஜந்த மெண்டிஸின் அபார ஆட்டத்தால் இலங்கை தலைதப்பியது: சொல்கிறார் மேத்யூஸ்

305

அஜந்த மெண்டிஸ் ஆட்டத்தால் அதிர்ஷ்டவசமாக முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்தது.

இதில் இலங்கை 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் அஜந்த மெண்டிஸ் 20 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

இது பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக தோல்வியில் இருந்து தப்பித்து விட்டோம். எங்களுக்கு குழப்பம் ஏற்படுத்து போட்டியாக அமைந்து விட்டது. ஆனால் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம்.

பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் துடுப்பாட்ட பயிற்சியிலும் சிறப்பாக ஈடுபட்டனர். மெண்டிஸ் சிறப்பான இன்னிங்சை ஆடினார்.

மேலும், இந்தப் போட்டியில் தனுஷ்கா, ஷேஹான் ஆகியோரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. இருப்பினும் அவர்கள் சிறந்த வீரர்கள்” என்று கூறியுள்ளார்.

SHARE