அதிர்ச்சியடைந்த அனுஷ்கா.. டோனியால் கதறி அழுதேன்: சொல்கிறார் கோஹ்லி [

328
 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு அறிவித்ததும் தான் அழுது விட்டதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் பாதியில் டோனி திடீரென ஓய்வை அறிவித்தார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து துணை அணித்தலைவராக இருந்த விராட் கோஹ்லி டெஸ்ட் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் டோனியின் ஓய்வு முடிவால் தான் அழுததாகவும், நான் தான் இனி டெஸ்ட் அணித்தலைவர் என்பது நம்ப முடியாமல் இருந்ததாகவும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், டோனி தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்துவிட்டார். அப்படி இருக்கையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.

நான் தான் அடுத்த டெஸ்ட் அணித்தலைவர் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதை ஏற்றுக் கொள்ளவே எனக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

சிறிது நேரம் கழித்து எனது அறைக்கு சென்றேன். அங்கு அனுஷ்கா சர்மா இருந்தார். அவரிடம் செய்தியை தெரிவித்தேன். அவருக்கும் ஆச்சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் அழத் தொடங்கிவிட்டேன்.

நான் அணித்தலைவரான தருணம் சிறப்பானது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது ஒரே கனவு என்று கூறியுள்ளார்.

SHARE