யு.எஸ்.- பிறந்தநாள் கேக்கின் ஒரு துண்டை அனுமதியின்றி சாப்பிட்டான் என்ற காரணத்தினால் 9-வயது சிறுவன் கைகளில் விலங்கிடப்பட்டு அடித்ததால் மரணமடைந்துள்ளான். இக்கொடிய சம்பவம் யு.எஸ்சில் Hagerstown என்ற இடத்தில் நடந்துள்ளது.
சிறுவனின் தாயாரின் காதலனான 30வயதுடைய றொபேட் வில்சன் என்பவர் இதனை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட இவர் 1மில்லியன் டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 4மணித்தியாலங்கள் வரை அவனின் தாயார் மற்றும் வில்சன் இருவரும் சிறுவனுக்கு எந்த வித மருத்துவ உதவியையும் செய்யவில்லை என புலன்விசாரனையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த சமயம் அங்கு இருந்த வேறொருவர் 911-ஐ உதவிக்கு அழைத்துள்ளார்.
முதல் தடவை CRS வீட்டிற்கு வந்த போது அவர்கள் சிறுவனின் தாயாரை சந்திக்க சாதாரண சம்பவம் மருத்துவ உதவி தேவையில்லை என கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டார்.
சிறுவனின் மூச்சு இயக்கம் நின்றதும் திரும்பவும் மருத்துவ உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர்.
சிறுவனுக்கு கழுத்து, முகம், பின்புறம், பிட்டம் ,வயிறு, மற்றும் கால்கள் போன்ற பாகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.