அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினர் கைது

329

 

அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் அனுமதியின்றி தனியார் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக இராணுவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் நகர எல்லைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடு ஒன்றின் கூரையின் நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இராணுவத்தில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு சந்தஹிரு சேய தாதுகோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மேற்படி நிர்மாணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடு இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்குரியது என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE