அமெரிக்க சுற்றுலா பயணி பலாத்காரம் செய்து கொலை: படுகாயத்துடன் உயிர் தப்பிய கணவன்

308
கணவருடன் சென்ற அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரை மர்ம நபர் தாக்கி பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள மருத்துவ தம்பதிகளான Jessica Colker மற்றும் அவரது கணவரும் இணைந்து கரீபியன் கடல் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரெனடாவின் கடற்பகுதியில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் இவர்களை நெருங்கி வந்து பேச்சுக்கொடுத்துள்ளார்.

இதனிடையே திடீரென்று அந்த நபர் வாள் போன்ற ஆயுதத்தால் இவர்களை தாக்கியுள்ளார். இதில் கணவர் Brian Melto படுகாயமடைந்துள்ளார்.

கணவரை காப்பாற்றும் பொருட்டு முயன்ற அவரை அந்த நபர் பலாத்காரம் செய்து தனது கையில் இருந்த ஆயுதத்தால் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியதாக கூறிய Melto உடனடியாக தனது காயங்களை பொருட்படுத்தாமல், அவர்கள் தங்கியிருந்த ஹொட்டெலுக்கு வந்து உதவி கேட்டுள்ளார்.

ஆனால் ஹொட்டெல் ஊழியர்கள் சென்று சேர்வதற்கு முன்னரே மருத்துவர் Jessica உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரித்த ஹொட்டெல் ஊழியர்கள், படுகாயமடைந்த மருத்துவரை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரிடம் கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Costa Rica பகுதியில் சுற்றுலா சென்ற போதுதான் முதன் முறையாக இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.

அந்த நட்பு காதலாக வளர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மருத்துவர்களான இருவரும் முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

SHARE