அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து அமரிக்க தூதரகம் தகவல் எதனையும் இன்னும் வெளியிடவில்லை.
எனினும் கெசாப் தமது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பன தொடர்பில் தாம் பேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.