அமைச்சரவை அமைச்சுப் பதவிக்காக தமது கொள்கைகளை காட்டிக் கொடுக்க ஒரு போதும் இணங்கப் போவது இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம் தெரிவித்துள்ளார்.
மதுகம பிரதேசத்தில் வாராந்த சந்தை கட்டட தொகுதியை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அரசாங்கத்தை தாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை என ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.