அல்குர்ஆன் சுமந்து வரும் தூதை இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம்’ எனும் நிறுவனம் உலமாக்களின் ஆலோசனையுடன் இன்று (29) அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தாருஸ்ஸலாமில் நடைபெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போது, அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இந்நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை வடிவமைக்கும் நோக்கில் செயற்குழுவொன்றும் இக்கலந்துரையாடலின் போது நியமிக்கப்பட்டது.