ஆண்டார்குளம் ஆலய பாற்குட பவனி!

276

செங்கலடி ஆண்டார்குளம் ஸ்ரீ நாகதம்பிரான் நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனி நடைபெற்றது.

இதன்போது கொம்மாதுறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று பின்னர் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தலையில் பால்குடமேந்தி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கொம்மாதுறை பிரதான வீதி, செங்கலடி சந்தை வீதி வழியாக வருகை தந்து ஆலயத்தை சென்றடைந்தனர்.

இதன்போது இறுநூறுக்கு மேற்பட்டோர் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு கலந்து கொண்டிருந்தனர்.

இவ் பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.மகேஸ்வரன் குருக்கள் தலைமையில் அபிஷேகப் பூசை மற்றும் பாலாபிஷேகப் பூசைகள் உட்பட்ட பூசைகள் நடைபெற்றது

SHARE