ஆறு ஏக்கரைக் கொண்ட இந்த “மானாபுல்” வனப்பகுதியின் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாம்

294

 

 

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ தோட்டப்பகுதியில் உள்ள மானாபுல் வனப்பகுதியில் 03.04.2016 அன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

1fdc69a4-4ab2-4f24-b7c9-d5814792953e 7e66a2b8-eb15-426a-986b-af5641164739 9a828a87-3bad-4b81-abac-ee522d40ba00 c2b51f2e-f0ab-49fb-b2a9-39ef4d7733dc

ஆறு ஏக்கரைக் கொண்ட இந்த “மானாபுல்” வனப்பகுதியின் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

நானுஓயா பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

 

இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு தனமாக தீ வைத்ததன் காரணமாக இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE