இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரை இறுதியில் மோதுவதை பார்க்க வேண்டும்: மைக் ஹசி

391
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் மோதுவதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று அவர் அளித்த பேட்டியில் “தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன். அரையிறுதியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்  மோதுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஆஸ்திரேலியா 5-வது முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாறு படைக்கும்.” என்றார்.

உலகக் கோப்பைக்கு முன்னர், இந்திய அணியின் மோசமான பார்மை மனதில் வைத்து, அது காலிறுதிக்கு கூட தகுதி பெறாது என்று ஹசி தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது

SHARE