இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும்-சடகோபன் ரமேஷ்

312

‘இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை விரைவில் அவுட்டாக்க வேண்டும்,’’ என, இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறினார்.

ஈரோட்டில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் பேசியதாவது:

அக்டோபரில் நடக்கும், இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும். இந்தியா வெற்றிக்கு, 60 சதவீதம் வாய்ப்புள்ளது.

டெஸ்ட் தொடரை நிச்சயம் இந்தியா கைப்பற்றும். மூன்றாவது நாளுக்கு பின் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதே இதற்கு காரணம்.  தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டியது முக்கியம். டிவிலியர்ஸ், இரண்டு மணி நேரம் களத்தில் நின்று விட்டால், போட்டியின் தன்மையே மாறிவிடும்.

இவ்வாறு சடகோபன் கூறினார்.

SHARE