இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி நடக்க வாய்ப்பே இல்லை: சொல்கிறார் சோயிப் அக்தர்

354
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சில் டிசம்பர் மாதம் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

இதற்கிடையில் தீவிரவாத தாக்குதல் மற்றும் எல்லையில் அத்துமீறல் போன்ற காரணங்களால் பாகிஸ்தான் அணியுடன் தொடர் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும், துரதிருஷ்டவசமாக இந்திய எல்லையில் அமைதி நிலவாத நிலையில் விளையாடுவதற்கு இது சரியான நேரமில்லை எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் இந்தியா கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இருப்பினும் விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது என்று எல்லோருக்கும் தெரிவிகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

SHARE