இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறதா?

276
 

 

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே கிரிக்கெட் தொடர் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆகிய இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை துபாயில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜைல்ஸ் கிளார்க் உதவியுடன் நடந்துள்ளது.

அந்த பேச்சுவார்த்தையில் இலங்கையில் தொடரை நடத்தலாம் என்று இந்தியா ஆலோசனை கூறியுள்ளது.

இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைவர் ஷகாரியார் கான் பாகிஸ்தான் அரசிடம் கொண்டு சென்று அனுமதி வாங்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் ஷகாரியார் கான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

பாகிஸ்தான் பிரதமர் அனுமதி அளித்தால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளது.

தற்போது இலங்கையில் மழைக்காலம் நிலவி வருகிறது. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் போட்டியை ஸ்டார் நிறுவனமும், பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளை டென் நிறுவனமும் ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ளது.

ஆகையால், இந்த பிரச்சனையை இரு வாரியமும் எப்படி தீர்க்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

SHARE