இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தின விழாவில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின், இந்திய விமானப்படையின் கவுரவ குரூப் கேப்டனாக கடந்த 2010ல் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற 83வது ஆண்டு தின விழாவில் விமானப்படையின் கவுரவ குரூப் கேப்டன் சீருடையில் அவர் வந்திருந்தார்.
இதில் பேசிய சச்சின் டெண்டுல்கர், நான் எனது மகனை இங்கு அழைத்து வர ஆசைப்பட்டேன். அவர் விமான படையில் சேர ஆவலுடன் உள்ளான்.
முடிவெடுப்பதில் அவன் இன்னும் சிறுவனாக இருக்கிறான். ஆனால் இந்த விடயத்தில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் கவுரவ கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் விளையாட்டு வீரர் சச்சின் தெண்டுல்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.