இந்திய வீரர்களை வீட்டிற்கு அழைத்து தடபுடலாக விருந்து கொடுத்த புஜாரா

320

டோனி, கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் புஜாரா.

இந்தூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 18ம் திகதி ராஜ்கோட்டில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி ராஜ்கோட் சென்றுள்ளது.

அங்கு தான் புஜாராவின் வீடும் உள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த புஜாரா, வீரர்களுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் அணித்தலைவர் டோனி, ரெய்னா, கோஹ்லி, ரஹானே, ரோஹித், அஸ்வின், தவான் உள்ளிட்ட வீரர்களும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

SHARE