இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாரிய நில நடுக்கத்தையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இதேவேளை, குறித்த நில அதிர்வினால் பாதிப்பு கிடையாது என்றும் இருந்தாலும் சற்று கடற்புர வாழ்மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.