இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டமில்லை – லக்ஸ்மன் கிரியல்ல

268

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டமில்லை என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு நீதிமன்றம், வெளிநாட்டு நீதவான்கள், வெற் வரி மற்றும் பிணை முறி தொடர்பில் கோசம் எழுப்பி வந்த கூட்டு எதிர்க்கட்சி தற்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் எதிர்க்கட்சியினர் அனுமானின் வாலைப் பிடித்து தொங்க முயற்சிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE