இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை பாகிஸ்தானிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என பாகிஸ்தான் டுடே தகவல் வெளியிட்டுள்ளது. லாகூர் விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 107 ஹெரோய்ன் உள்ளடக்கப்பட்ட வில்லைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி பல்லாயிரம் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஹனீப் மற்றும் ஜாவிட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.