இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருடைய விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறித்த விஜயத்தின் போது ஜெய்சங்கர் இலங்கையின் அரசாங்கத்தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். இதேவேளை, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜின் பயணத்துக்கான ஆயத்தப்பணிகளிலும் அவர் ஈடுபடுவார் எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.