இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைதுசெய்தனர். அத்துடன் இந்த மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 7 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 நாகை மீனவர்களும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அடங்குகின்றனர். மன்னார், நெடுந்தீவு, பருத்தித்துறைக் கடற்பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன –