இலங்கை முஸ்லிம்களின் வரலாறு-சரியா? தவறா?

335

 

இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு மற்றொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை பல்வேறு அரபு யாத்திரிகர்களையும் வணிகர்களையும் இலங்கையை நோக்கி ஈர்த்தது.

இலங்கை முஸ்லிம்கள் தெற்காசியாவின் சிறு பான்மை முஸ்லிம் சமூகங்களில்   மிக நீண்ட வரலாற்றுத் தொன்மை கொண்டவர்கள். சுமாராக ஆயிரம் வருட கால பூர்வீகம் அவர்களுக்குள்ளது. அரேபியர் களின் வழித் தோன்றல்கள் எனக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள் 13ம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்திய முஸ்லிம்களுடன் தமது சமூக, கலாசார, சமய உறவுகளைப் பேணத் தொடங்கினர். இதே வேளை 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர் மலாக்கா, ஜாவா தீவுகளைச் சேர்ந்த மலா முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களுடன் இணைந்து கொள்கின்றனர்.

இந்திய குஜராத்தின் போராக்கள், மற்றும் மேமன்கள் என்போரும் மிகச் சிறு அளவில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இணைந்திருக்கின்றனர். கலாசார ரீதியில் சிற்சில வேறுபாடுகள் தமக்கு மத்தியில் நிலவுகின்றபோதும், முஸ்லிம்கள்/இஸ்லாமியர்கள் என்ற பொது அடையாளத்தை இலங்கை முஸ்லிம்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, அடையாளம், அரசியல் தேசம் பற்றிய நீண்ட விவாதங்கள் வரலாற்று நெடுகிலும் நடைபெற்று வந்துள்ளன. 1800களில் இலங்கை முஸ்லிம்கள் தமக்கான அடையாளத்தை இன ரீதியாக நிறுவ வேண்டிய அரசியல் தேவை நிலவியதால், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமைகள் முஸ்லிம்களை சோனகராக (Moor) அடையாளப்படுத்தினர். இது வரலாற்றின் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் தேவையாயிற்று. ஆயினும் 1980களுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் இந்த இனத்துவ அடையாளப் படுத்தலிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர்.

இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள் என்ற சமய அடையாளத்தையே வலியுறுத்துகின்றனர். தமிழை தாமொழியாகக் கொண்டிருப்பினும் கலாசாரத்தி லும் பண்பாட்டிலும் தமக்கேயுரிய தனித்துவ அடையாளங்களை பேணுகின்றனர். எனவே, இன, மொழி அடையாளங்களைக் கடந்த சமய அடையாளம் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு பிரிக்க முடியாத கூறாகும். இலங்கை முஸ் லிம்களின் அரசியல் அடையாளம் குறித்து ஆவுக் கட்டுரை எழுதுகின்றவர்கள்.

இந்த அடிப்படை யதார்த்தத்தைக் கவனத்தில் எடுத்தாக வேண்டும். யாருக்கும் அவரது தனிப்பட்ட மொழி சார்ந்த, இனத்துவம் சார்ந்த, இடதுசாரியம் சார்ந்த பார்வைகள் இருக்கக் கூடும். ஆனால், அதை முழு மொத்த முஸ்லிம் உம்மாவின் பார்வையாக உருமாற்றம் சேவது மிகப் பெரும் வரலாற்றுத் துரோகமாகும். எப்படி மொழியும் இனமும் அடையாளத்தின் குறியீடுகளாக வலியுறுத்தப்படுகின்றதோ அது போன்றே சமயமும் அதன் நியாயமான எல்லையில் அடையாளத்தின் குறியீடாக முடியும். ஏனெனில் அடையாளப் பிரக்ஞை என்பது ஒரு சமூகக் குழுமத்தின் உணர்வு நிலைப்பட்ட (Conciousness) ஓர் அம்சமாகும்.

இந்த அடையாளம் பற்றிய விவாதத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. அதை நான் விவாதத்திற்கு எடுக்கவில்லை. அது இந்தப் பத்தியின் நோக்கமுமல்ல. இலங்கை முஸ்லிம்களின் சமூக, வரலாறு பற்றிய சில முக்கிய, சுவாரஷ்யமான குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் பத்தி தொடங்கப்படுகின்றது. இதனூடே முஸ்லிம்கள் தமது வரலாற்றை மேலோட்டமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இப்பத்தியின் குறிக்கோள் எனலாம்.

இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை 2001ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி சராசரியாக 10% எனலாம். இதுவரை 1981ம் ஆண்டைய கணிப்பீடே மேற்கோள் காட்டப்பட்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும். 9% என்று அரசாங்க புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகின்றது. ஆனால், இந்தக் கணிப்பீட்டில் (2001) திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் அகிய ஆறு மாவட்டங்களின் சனத்தொகை கணிப்பீடு உள்ளடங்கவில்லை. காரணம் அம்மாவட்டங்களில் தொகை மதிப்பீடு மேற் கொள்ளப்படவில்லை. இவற்றுள் திருகோண மலை, மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்க ளிலும் வாழும் முஸ்லிம் களின் எண்ணிக்கை குறிப் பிடத்தக்கது.

அரசாங்க புள்ளிவிபரத் திணைக்கள தொகை மதிப்பீட்டின்படி முஸ் லிம்களின் எண்ணிக்கை 16,85,880. இத்துடன் திரு மலை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டால் தற் போதைய இலங்கை முஸ் லிம்களின் எண்ணிக்கை சுமார் இரு மில்லியனாக இருக்கும். அல்லது அத ற்கு சற்றுக் குறைவாக இருக்கும் என்பதில் சந்தே கமில்லை. இன்று முஸ் லிம்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் மாவட் டங்களாக அம்பாறை, கொழும்பு, கண்டி, புத்த ளம், களுத்துறை கம்பஹா என்பன விளங்குகின்றன.

அரபு வணிகர்களின் வருகை

ஹிரோயின் போதை வஸ்துக்கு பொப்பி தாவரங்கள் மூலப் பொருளாக இருப்பது போன்று தேசிய அல்லது இனத்துவ அல்லது அடிப்படை வாத கருத்து நிலைகளுக்கு வரலாறே மூலப் பொருளாக அமைகிறது. இக்கருத்து நிலைகளுக்கு ஓரு அத்தியாவசியக் கூறாக சிலவேளை ஒரே அத்தியாவசியக் கூறாக கடந்த காலமே அமைகிறது. ஒரு தகுந்த கடந்த காலம் இல்லாவிட்டால் அது எப்பொழுதும் புதிதாகக் கண்டுபிடிக்கக் கூடியதாகவே உள்ளது. (Eric J. Hobsbown-1994)

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மை குறித்த ஆய்வுகள் தமிழ் சூழலில் இடம்பெற்றமை மிகக் குறைவாகும். முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய முனைந்தவர்கள் இஸ்லாத்தின் தோற்றத்துடன் இணைத்தே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து எழுதத் தலைப் பட்டனர். இதன்படி கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்று எழுத்தியல் தொடங்கப்பட்டது.

முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்களாகக் காட்ட முனைந்த, முஸ் லிம்களின் அரசியல் அடையாளத்தை ஏற்க மறுத்த தமிழ் அரசியல் தலை மைகள் முஸ்லிம் வரலாற்றை வெறும் 15ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கு வதாக எழுதினர். இது இனத்துவ அரசியலில் நிலவும் தமிழ்த் தேசியத்தின் இராமநாத முகம். இத்தகைய சைவ வேளாளர் மேலாதிக்கத்திற்குள் முஸ்லிம்களையும் அடக்கி வைப்பதற்கு 1800 களில் மேற்கொள்ளப்பட்ட இருட்டடிப்பு முயற்சி.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் முஸ்லிம்களின் வரலாற்றை நேர்மை யாகப் பார்க்க வேண்டிய அரசியல் தேவை இன்று எழுந்துள்ளது. இலங்கை ஆபிரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களுக்கிடையே இருக்கும் கேந்திர நிலையமாக விளங்குகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இலங்கை ஒரு வணிக மத்திய நிலையமாக மாறுவதற்கு இப் புவியியல் அமைப்பு ஏதுவாகியது.

இலங்கையின் வாசனைத் திரவியங்களும் இரத்தினக் கற்களும் பூர்வீகம் தொட்டே உலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. கீழைத்தேச உலகத்திற்கும் மேலைய உலகத்திற்கும் இடையிலான கடற் பாதையானது இலங்கைத் தீவின் பல இடங்களையும் அவாவிச் சேல்கின்றன. இதனால் மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான வணிகப் பாதைகளின் மத்திய தளமாக இலங்கை விளங்கியது.

இவ்வணிகம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே அரபிகளின் தனியுரிமையாக இருந்ததை வரலாறு எடுத்துரைக்கின்றது. அரபுத் தீபகற் பத்தின் கரையோரப் பகுதிகளான ஹிஜாஸ், யெமன், ஹளரமவ்த், ஓமான், பஹ்ரைன் ஆகிய பிரதேசங்களிலிருந்து புறப்பட்ட அரேபியர்களின் வணிகக் கப்பல்கள் மேற்குக் கரையோரம், இலங்கைத் தீவு, கிழக்கிந்தியக் கரை யோரம், மாலைதீவு ஆகிய பிரதேசங்களுக்கூடாக சீனா சேன்றடைந்தன. சீனாவிலிருந்து புறப்படும் கப்பல்கள் இப்பிரதேசங்களின் வாசனைத் திரவியங்கள், இரத்தினக் கற்கள், யானைத் தந்தங்கள் போன்ற வணிகச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு யெமன் கரையை சேன்றடைந்தன.

அங்கி ருந்து இவ்வணிகச் சரக்குகள் ஹிஜாஸுக்கூடாக எகிப்துக்குக் கொண்டு சேல்லப்பட்டு எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குச் சேன்றன. இவ்வணிக  முயற்சிகள் காரணமாக ஏற்பட்ட குடியேற்றங்களே மேற் கிந்திய, இலங்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட ஆரம்ப அரபுக் குடியேற் றங்கள் ஆகும்.

இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு மற்றொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை பல்வேறு அரபு யாத்திரிகர்களையும் வணிகர்களையும் இலங்கையை நோக்கி ஈர்த்தது.

இனிவரும் பத்திகளில் இஸ்லாத்திற்கு முந்திய இலங்கையில் அரேபியர் கொண்டிருந்த சேல்வாக்கினை இப்னு ஸஹ்ரயார், சுலைமான் அத்தாஜிரி அல் மஸ்ஊதி, பலதூரி, இப்னு குர்துபா போன்ற அரபு வரலாற்று ஆசிரி யர்களின் கருத்துக்களோடு நோக்குவோம். கிளோடியஸ் தொலமி கி.பி. 150ல் இலங்கையை உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைந்தார். இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆவில் ஈடுபட்டிருந்த ஓனஸ் கிரிட்டஸ் என்பவரிடமிருந்து தொலமி பெற்ற தக வல்களும் புவியியல் ஆவுக் குறிப்புக்களுமே தொலமி இலங்கையையும் உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைவதற்கு உதவியாக அமைந்தது. இலங்கையின் வரலாறு பற்றிய ஐரோப்பியர்களின் தேசப் படங்களில் தொலமியின் வரைபடமே காலத்தால் முந்தியதும் மிகவும் தொன்மை யானதுமாகும்.

இலங்கையை தப்ரபேன் என்றழைக்கும் தொலமி இலங்கை யின் மிகப் பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை பாசில் பலூசியஸ் (பாரசீக நதி) என்றும் தெதுரு ஓயாவை சோனா பலூசியஸ் (அரேபிய நதி) என்றும் ஜின் கங்கையை அஸனாக் பலூலியஸ் (எதியோபிய நதி) என்றும் குறிப் பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோரங்களில் பாரசீக, அறாபிய, மற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சிதறலாகவும் வேறு சில சில இடங்களில் சேறிவாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலியக் கால அரபுக் கவிஞர் இம்ராஉல் கைஸ் இப்னு ஹஜர் என்பவரின் கவிதைகளிலும் இலங்கைக்கும் அரபுல கிற்கும் இடையில் நிலவிய உறவுகளை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார். (இவரது கவிதைகள் 1837ல் முதன் முதலாக மிஸ்யம் என்பவரால் பாரிஸ் நகரில் பதிப்பிக்கப்பட்டது.) இவரது தீவானின் மூன்றாவது கவிதையில் ்பில்பில்சு என்ற வார்த்தையும் இன்னொரு கவிதையில் ்கரன்புல்சு என்றும் வருகிறது. பில்பில் என்பது மிளகாயைக் குறிக்கிறது.

இது அரபு நாட்டில் உற்பத்தியாகாத ஒரு பொருள். அதேவேளை கரன்புல் என்பது கராம்பைக் குறிக்கும் சோல். ஆனால் இது அடிப்படையில் ஓர் அரபு மொழிச் சோல் அல்ல. கீழைத்தேய நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் அரேபியர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை இச்சோற்கள் காட்டுவதாக இம்ராஉல் கைஸின் கவிதைகளை ஆராந்தவர்கள் அபிப்பிராயப்படு கின்றனர்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் தொன்மை நூலான மகாவம்சம் கி.மு. 4ம் நூற்றாண்டளவில் அனுராதபுரத்திற்கு மேற்குப் புறமாக யோன கர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. பாரதி யாரின் சில கவிதையடிகளிலும் இந்த யோனகர் என்ற சோல் பயன்படுத்தப் பட்டுள்ளதோடு இலங்கையின் புராதன சிங்களக் காவியங்களிலும் யோனக என்ற பதம் கையாளப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலே இலங்கையில் அரேபியர் கொண்டிருந்த வணிகச் சேல்வாக்கினை காட்டுகின்றது.

கி.மு. 4ம் நூற்றாண்டளவில் தென்மேற்கு ஆசியாவின் பெரும் நிலப் பரப்பை ஆண்டு வந்த மாமன்னர் சுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி பல்கீஸ் அவர்களுக்கு இலங்கையின் பெறுமதி யான இரத்தினக் கற்களும் முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்ததென்ற வரலாற்றுச் சம்பவங்கள் மரபு வழிக் கதைகளாக சில அரபு நூல்களில் காணக் கிடைக்கின்றன. இவரது ஆட்சிக் காலத்திலேயே இலங்கை, அரேபியர் களிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையை இதன் மூலம் ஊகிக்கலாம்.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கை அரேபியருக்குப் பரீட் சயமாக இருந்துள்ளதையே இவ்வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. எனவேதான், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் அரேபியக் குடியேற்றங்கள் காணப்பட்டன என்பதை தென்கிழக்கு ஆசிய வரலாற்றை ஆராந்த அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். The History ofCOMMERCE in Indian Ocean என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப் பகுதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம்பெற்றன” என்கிறார்.

கி.பி. முதலாம் நூற்றாண்டளவில் இந்த வணிகத் தொடர்புகள் இலங்கையில் அரேபியர்கள் தங்கியிருக்கவும் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளவும் காரணமாகியது. கிறிஸ்துவுக்கு பிந்திய முதல் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான அரேபியர்களின் இலங்கைச் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்து, அக்காலை இலங்கையில் காணப் பட்ட பெரும்பாலான வணிகத் துறைமுகங்கள் அவர்களது ஆதிக்கத்தின் கீழ் வந்தன. சேர். தோமஸ் ஆர்னோல்ட் என்பவர் தனது Preaching of Islam என்ற நூலில் இது குறித்துத் தரும் தகவலை அடுத்த இதழில் நோக்குவோம்.

“கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முற்றாக அவர்களின் (அரபிகளின்) கைகளிலேயே இருந்தது. கிறிஸ்தவ யுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதி களில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்.” (Thomas Arnold – Preaching of Islam)

இந்து சமுத்திரத்தில் அரேபியர் கொண்டிருந்த வணிக ஆதிக்கத்தினை ஆர்னோல் டின் கூற்று எடுத்துக் காட்டுகின்றது. இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் S.D. Goitien தொகுத்துள்ள அரேபியர்களின் வணிக நடவடிக்கைகள் பற்றிய கடிதங்களின் தொகுப்பு அமைந்துள்ளது. அவர்LETTERSand Documents of India on Medival Times என்னும் தனது தொகுப்பில் பின்வரும் தகவலை இணைத்துள்ளார்.

“அரபு வணிகர்கள் இந்து சமுத்திரப் பிரதேசங்களில் (மலபார், இலங்கை, மாலைதீவு) வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர்கள் தமது மனைவிமார்களையும் அங்கு அழைத்துச் சேல்லவில்லை. பருவ காலங்களில் தமது மனைவியரைப் பிரிந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இடர்பாடுகள், பிரிவுத் துயரங்களை அவர்களது கடிதங்கள் மூலம் அறியலாம்.” இத்தகைய கடிதங்களின் தொகுப்பு இன்றுவரை இந்தியாவின் தேசிய சுவடிக் கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோமர்களினதும் கிரேக்கர்களினதும் கடல் பயணங்களின் வெற்றி அரேபியர் களின் பயண அனுபவங்களிலேயே தங்கியிருந்தது. ஆயினும், கடல் பயணங் களில் அரேபியர்கள் கொண்டிருந்த அனுபவமும் ஆழமான அறிவும் கிரேக்கர் களுக்கும் ரோமர்களுக்கும் பயன்பட்ட முறைகள் இஸ்லாத்திற்குப் பின்னரே நூல்களாக எழுதப்பட்டன. இவ்வாறான அனுபவங்களை வெளிப்படுத்தும் நூல்களில் சுலைமான் அத்தாஜிர் எழுதிய நூல் மிகவும் பிரபல்யமானது. இந் நூலின் மேற்கோள்கள் பல சில்சிலதுத் தவாரீஹ் என்ற நூலில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்பு பிரபலமான அபூ ஸைத் என்பவரின் குறிப்புகளிலும் இலங்கைக்கும் அரேபியாவுக்கும் இடையில் நிலவிய வணிகத் தொடர்புகள் பற்றி காணக் கிடைக்கின்றது.

அரேபியர்களின் கடல் கடந்த வணிகம் இந்தியத் துணைக் கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக் காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.

பழங்கால கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களும் இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் முதன் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்க ளுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் எனக் குறிப்பிடுகின்றது. பிலைனிங் (கி.பி.1) ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோ பிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் சேல்வாக்கினை உறுதி சேகின்றனர். கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் சேல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.

ஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிகத்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென் கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும் அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்த கத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக் கண்டத் துடனான வர்த்தகத்தில் சேல்வாக்குச் சேலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

இக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் “அரேபியர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர், கள்ளிக்கோடு, கொல்லம், காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும் மலபாரின் ஏனைய துறைமுகங்களி லும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்ச” என்று குறிப்பிடுகின்றார்.

இந்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முன்னரே இலங்கை யில் அரேபியர் குடியேற்றங்கள் இருந்ததையும் அரேபியர் வியாபாரத் துறையில் சேல்வாக்குப் பெற்றிருந்ததையும் காட்டுகின்றன.
SHARE