இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்துள்ள விழையாட்டு மைதானம் விடுவிக்க நடவடிக்கை – கே.கே. மஸ்தான்

303

 

 

இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் விழையாட்டு மைதானம் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று 15-09-2016 வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கும் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் வழையாட்டு மைதானத்தை பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் கே.கே. மஸ்தானால் கோரிக்கை வைத்ததற்கு அமைவாக பாடசாலைக்கு சொந்தமான அக்காணியை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதே நேரம் பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்தார்.

unnamed-20 unnamed-21 unnamed-22 unnamed-23

SHARE