இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை ரசித்தேன்: கோஹ்லி

318

இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை வெகுவாக ரசித்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தமிங்க பிரசாத், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மோதிக் கொண்டனர்.

தவிர, இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சந்திமால், திரிமன்னே ஆகியோரும் இஷாந்த் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, “இந்த மோதல் கட்டுக்குள் இருந்ததால் நான் இதனை ரசித்தேன். இதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த காரணத்தினாலே இஷாந்த் ஆக்ரோஷமாக செயல்பட்டு 19 ஓவர்கள் ஒரு ஓட்டங்கள் கூட கொடுக்காமல் மிரட்டலாக பந்துவீசினார்.

இந்த சம்பவம் சரியான நேரத்தில் நடந்ததால் அணியின் வெற்றிக்கும் கைகொடுத்தது” என்று கூறியுள்ளார்.

SHARE