உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை படுத்தும்பாடு சொல்ல முடியாது.

329

 

 

லகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்,  பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம், பெண்களை படுத்தும்பாடு சொல்ல முடியாது.

லகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்,  பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம், பெண்களை படுத்தும்பாடு சொல்ல முடியாது.

இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ராக்கா மற்றும் மொசூல் நகருக்குள் சென்று,   பெண்களை பிடித்து  கூண்டு வைத்த வண்டியில் அடைத்து, தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.  பெண்களை போதை பொருளாகவே கருதும் இந்த இயக்கம்,   தற்போது பாலியல் வன்கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அதனை படிக்கும் போதே மனம் பதறுகிறது.

பெண் கர்ப்பமாக இருந்தால், குழந்தை பிறக்கும் வரை பாலுறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கு உரிமையானவர் மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும். மற்றவர்களை அனுமதிக்க கூடாது.

மாதவிடாய் காலத்தில் உறவு கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

பெண்ணுக்கு மகள் இருந்தால், யாராவது ஒருவருடன்தான் பாலுறவுக்கு அனுமதி.

இரண்டு சகோதரிகளுக்கு உரிமையாளராக இருந்தாலும் யாராவது ஒருவருடன்தான் அனுமதி. மற்றவரை விற்று விட வேண்டும்.

அந்த பெண்ணுக்கு உரிமையாளராக தந்தை இருந்தால், அவருடன் உறவு கொள்ள மகனுக்கு அனுமதி கிடையாது. அதே வேளையில் அந்த பெண்ணை மகனுக்கு விற்று விடலாம்.

அந்த பெண் கர்ப்பம்தரித்து விட்டால், அந்த பெண்ணின் இறப்பு வரைக்கும் பாதுகாக்க வேண்டும். அவரை விற்க அனுமதி கிடையாது.

ஒரு முறை ஒரு பெண்ணை விற்று விட்டால், அதற்கு பின் எந்த விதத்திலும் அந்த பெண்ணை விற்பனை செய்தவர் நெருங்க கூடாது.

இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒரு பெண்ணை வாங்க அனுமதியில்லை.

பெண்ணின் உரிமையாளர்கள், அவரிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இட்ட உத்தரவுகளை நிறைவேற்ற முடியாமல் இருந்தாலும் துன்புறுத்தல் கூடாது

முன்பின் தெரியாதவர்களுக்கு அந்த பெண்ணை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. அந்த பெண்ணை அன்புடன் அவர் பார்த்துக் கொள்வாரா?  என்பதை கருத்தில் கொண்ட பின்னர்தான் எந்த பெண்ணையும் விற்பனை செய்ய வேண்டும்.

இது குறித்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள உத்தரவில்,” நமது சகோதரர்கள் நமது பாலியல் அடிமைகளை நடத்தும் விதம் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. அதனால், நமது ஷரியத் சட்டப்படி புதிய  கட்டளைகள் நடைமுறைக்கு   கொண்டு வரப்படுகிறது ” என்று கூறப்பட்டுள்ளது

SHARE