உளவாளியை சிலுவையில் அறைந்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

278
தங்களுக்கு எதிராக உளவு வேலை பார்த்த உளவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் புகைப்படங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.உலகம் முழுவதுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கு எதிரான உளவு வேலை பார்த்த உளவாளிகள் இருவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படுகொலைகள் லிபியா நாட்டில் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களில், முழங்காலிட்டபடி உள்ள உளவாளி அருகில் , மூன்றுசக்கர நாற்காலியில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் அமர்ந்திருக்கிறான்.

மேலும் அந்த புகைப்படத்தில் சிர்ட்டே நகரில் உளவாளிகளுக்கு மரணதண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஐ.எஸ். அமைப்பின் பிரச்சார ஆயுதம் மூலம் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் சர்வாதிகாரி முகமது கடாஃப்பியின் சொந்த நகரமான சிர்ட்டே தற்போது ஐ.எஸ். பிடியில் உள்ளது.

ஒரு வேளை சிரியாவின் ரக்காவை இழந்தாலும் மாற்று தலைநகராக சிர்ட்டேவை மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE