என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் “வலி”: மனம் திறக்கும் சேவாக்

307

ந்திய நாட்டிற்காக விளையாடிய ஒரு வீரருக்கு வழியனுப்பு போட்டியில் (பேர்வெல் மேட்ச்) பங்கேற்க தகுதி இல்லையா? என சேவாக் மனக்கவலையுடன் கூறியுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நினைவுகூர்ந்து வரும் சேவாக், கடந்த 2013 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியில் என்னை நீக்குவது குறித்து தேர்வாளர்கள் முன்னரே தெரிவிக்கவில்லை.

அப்படி தெரிவித்திருந்தால், டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஓய்வு பெற்றிருப்பேன், 13 ஆண்டுகள் விளையாடிய வீரருக்கு இதனை செய்யாதது வலியை ஏற்படுத்தியது.

பிசிசிஐ அல்லது டெல்லி கிரிக்கெட் சங்கம் இதனை செய்யவேண்டும், ஒவ்வொரு வீரருக்கும் இந்த கவுரவத்தை தருவது அவசியம் ஆகும்.

இந்த வழியனுப்பு போட்டி இல்லாதது என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்

 

SHARE