எம்முடன் விளையாட வேண்டாம்: பிரதமர் ஊடகங்களுக்குத் தெரிவிப்பு

281

 

சில ஊடகங்கள் செயற்படும் விதம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விமர்சன ரீதியான கருத்துக்களை வெளியிட்டார்.

கண்டியில் இன்று முற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை வலுவூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரதமர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

ranil-0-0

மங்கள சமரவீரவை நீக்குமாறு  பத்திரிக்கை திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியரை நான் அறிவேன். குறிப்பிட்ட காலத்தில் என்னையும் விலகுமாறு கூறியுள்ளனர். எமது அமைச்சர்களை விலகுமாறு கூறினால் அதற்கு முன்னர் அவர்களுக்கு சிறந்த பாடம் கற்பிக்க வேண்டும். எம்முடன் விளையாட வேண்டாம். இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும். மக்கள் அதிகாரத்தை வழங்கினால் மேலும் ஐந்து வருடங்களுக்கு செல்ல முடியும்.

SHARE