ஐபிஎல் சூதாட்டம்? மரத்தில் சடலமாக தொங்கிய நபர்

318

டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால், நாடாளுமன்றம் அருகே நபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள விஜய் சவுக் என்ற பகுதியில் நபர் ஒருவர் சடலமாக தொங்குவதை அருகிலிருந்த மக்கள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ராம் தயால் வர்மா என்றும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரது சட்டபையில் இருந்த கடிதம் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ள வர்மா தான் 13 கோடிரூபாய் வரை இழந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE