டிக்கோயா புளியாவத்தை பகுதியில் திடிரென ஏற்பட்ட ஐஸ் மழையுடன் மினி சூராவாளியினால் பிரதேசத்தில் மின்சாரதடை ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்
06.04.2016 மாலை 3 மணியளவில் திடீரென ஐஸ் மழையுடன் ஏற்பட்ட மினி சூராவளி காற்றில் புளியாவத்தை மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள இரண்டு கருபன்டன் மரம் அடியோடு வீழ்ந்ததில் பிரதேச மின் வினியோக கம்பிகள் வீழ்ந்த நிலையில் பிரதேச மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது மற்றைய மரம் பிரதான பாதையில் வீழ்ந்து பிரதேச போக்கு வரத்தும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
மேலும் தடைபட்ட மின்சாரத்தை மீளமைக்க அட்டன் மின்சாரசபையினர் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்