நாம் அன்று கூறியவைகள் இன்று உண்மையாகி விட்டன என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சம் வெளியிட்டார்.
நேற்று மதியம் கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் இலங்கையில் பல பகுதிகளில் ஐ.எஸ்.உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முதல் உறுப்பினர் கண்டியைச் சேர்ந்தவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டார்.
தெஹிவளை, கொலன்னாவை, பரகஹதெனிய பகுதிகளில் இவர்கள் இருப்பதாக தெரியவருகிறது. இவ் அமைப்புக்கு ஆதரவாளர்கள் கிழக்கில் அதிகமானோர் இருக்கிறார்கள்.
ஐ.எஸ். அமைப்பைப் பற்றி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்திலிருந்தே நாம் தகவல்களை வெளியிட்டோம். என்றாலும் நாம் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக் ஷவுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்ப்பதாகவும் பொய்ப்பிரசாரம் செய்வதாகவும் கூறினார்கள். இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழித்திருந்தால் நாடு இன்று ஐ.எஸ்ஸின் எச்சரிக்கை வலயமாக மாறியிருக்காது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பின்னால் சில அடிப்படைவாதக் குழுக்கள் செயற்பட்டுவருகின்றன.
இவர்களால் பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. எம்மிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றை நிரூபிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
எம்முடன் பகிரங்க வாதத்துக்கு வரும்படி நாம் முஸ்லிம் அமைச்சர்களை அழைக்கிறோம். எம்முடன் ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் நேரடி விவாதத்துக்கு வரலாம்.
ஆனால் அசாத்சாலியுடன் விவாதிக்க நாம் தயாராக இல்லை. விவாதிக்க தகுதியானவர்களுடனே விவாதிக்க வேண்டும்.
மத்ரஸா பாடசாலைகள்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் துருக்கி நாட்டின் உதவியுடன் நாட்டில் மத்ரஸா பாடசாலைகளை நிறுவிவருகிறார். தற்போது இங்கு 3000க்கும் மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகள் மூலம் அடிப்படைவாதமே போதிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பிரதமர் மத்ரஸா பாடசாலைகள் அடிப்படைவாதத்தைப் பரப்புகின்றன.
தீவிரவாதிகளை உருவாக்கின்றன என்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
ஆனால் அவ்வாறான பாடசாலைகள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன.
அடிப்படைவாத முஸ்லிம்களின் பெருக்கம்
அடிப்படைவாத முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பில் ஆயிரத்துக்கும் அதிகமான அடிப்படைவாத முஸ்லிம்கள் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கியுள்ளனர்.
அக்குறணை, மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசங்களிலும் வில்பத்து பகுதியிலும் இவ்வாறானவர்களைக் காணமுடிகிறது.
இவர்கள் முழுமையான தாடியுடன் கூடியவர்கள். புதிய மொழி பேசுபவர்கள்.
எமது நாட்டில் வழங்கப்பட்ட சுதந்திரத்தின் காரணமாகவே இவ்வகை புதிய முஸ்லிம்களைக் காணமுடிகிறது. இவர்களிலிருந்தும் சம்பிரதாய முஸ்லிம்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காகவே இந்த விபரங்களை நாம் பகிரங்கப்படுத்துகிறோம்.
இலங்கையில் பிரபாகரனை வெற்றி கொண்ட பலம்மிக்க இராணுவம் இருக்கிறது.
அதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகளை எம்மால் வெற்றிகொள்ள முடியும் நாம் அன்று கூறியவைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்திருந்தால் எமது பாதுகாப்பு குறித்து நாம் அச்சமடையத் தேவை இருந்திருக்கிறது.