சிரியாவில் உள்ள பல்மைரா நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 400 பேரை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன்னர், சிரியாவில் உள்ள பல்மைரா நகரை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று பல்மைராவை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் ராணுவம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடர்ந்தது.
சற்று முன்னர் சிரியா நாட்டு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், பல்மைராவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 400 பேரை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பல்மைரா நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் அநாதைகளாக கிடப்பதாக ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் அமைப்பினர் சமூக வளைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் ஆணையம், கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில், பல்மைராவை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு, அந்நகரை விட்டு சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.