ஒப்பாரி அறை தயார்: ஜப்பானில் விநோதம்

324
 

மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே தனி அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.

இந்த வசதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் கிடைக்கிறது.

குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை அழுத்தத்தினால் ஏற்படும் வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு செல்ல முடியும்.

இந்த அறைகளை முன்பதிவு செய்து விட்டு தனியாக வரும் சில பெண்கள் மூடிய கதவுக்குள் தனிமையில் அமர்ந்து வாய்விட்டும், மனம்விட்டும் அழுதுவிட்டு போகின்றனர்.

கண்ணீர் வராதவர்களுக்கும் அருவியாக கண்ணீரை சுரக்க வைக்கும் சாதனங்களும் இந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சோகத்தை வரவழைக்கக்கூடிய கார்ட்டூன் மற்றும் சினிமா படங்களையும் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டலுக்கு சென்று அழுது விட்டு வருகிறார் என்பது வெளி உலகுக்கு தெரியாத வகையில், அழுது, ஒப்பாரி வைத்து முடிந்தவுடன் கண்களில் இட்டுக்கொள்ளும் ‘ஐ லைனர்’ உள்ளிட்ட மேக்கப் சாதனங்களும் இங்குண்டு.

SHARE