ஓட்டங்களை சேர்ப்பதுதான் பெரும் சவால்: சொல்கிறார் அம்லா

329
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில், அதிக ஓட்டங்களை சேர்ப்பதே பெரும் சவாலாக இருப்பதாய் தென் ஆப்ரிக்க அணித்தலைவர் அம்லா தெரிவித்துள்ளார்.இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் மொகாலியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதுவரை மட்டைப்பந்தாளர்களுக்கு மட்டுமே சொர்க்கபுரியாக விளங்கி வந்த இந்த ஆடுகளம், பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த தென் ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணித்தலைவர் ஹாசிம் அம்லா, விக்கெட்டுகளை சாய்ப்பதை விட ஓட்டங்களை சேர்ப்பதே சவாலாக இருப்பதாய் தெரிவித்துள்ளார்.

மேலும், தெரிவித்த அவர், டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் இங்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், ஆனால் சவால்கள் நிறைந்த போட்டிகளாகவே இதுவரை இருந்துள்ளது என்றார்.

SHARE