ஓய்வு பெறும் முன் பிசிசிஐ-யிடம் ஷேவாக் கேட்டது என்ன? வெளியான ரகசிய தகவல்

330

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு ஷேவாக் ஓய்வு பெற விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான ஷேவாக், தான் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு ஓய்வு பெற விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரின் அந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிராகரித்து விட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்தே ஷேவாக் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷேவாக் தான் பிறந்த தினமான நேற்று ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஷேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ஓட்டங்களையும், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

மேலும், 19 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,048 ஓட்டங்கள் எடுத்துள்ளார் ஷேவாக்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 300 ஓட்டங்களை கடந்த ஒரே இந்திய ஷேவாக் தான். அதிலும் 2 முறை 300 ஓட்டங்களை (பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) கடந்து சாதனை படைத்துள்ளார்.

SHARE