ஓய்வு பெற்றவர்கள் கிளப்புக்கு வரவேற்கிறேன்: சங்கக்காராவுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

343
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காராவுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.நேற்று முடிந்த இந்த போட்டியோடு சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

அவருக்கு சிறப்பான முறையில் பிரிவு உபச்சாரம் அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உட்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் ஓய்வு பெற்ற சங்கக்காராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர் கூறுகையில், “மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள் சங்கக்காரா. நீங்கள் விளையாட்டின் சிறந்த தூதர் மற்றும் சிறந்த மனிதர். உங்களை ஓய்வு பெற்றவர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

SHARE