ஓய்வு பெற சங்கக்காராவுக்கு கிடைத்த சரியான தருணம்: சொல்கிறார் மனைவி யெஹாலி (வீடியோ இணைப்பு)

339
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரது மனைவி யெஹாலி கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அவரை சிறப்பாக வழியனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது.

இந்நிலையில் சங்கக்காரா ஓய்வு பற்றி அவரது மனைவி யெஹாலி கருத்து தெரிவிக்கையில், கண்டிப்பாக இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அவர் இலங்கை அணிக்காக 15 வருடம் விளையாடி இருக்கிறார்.

இந்த நிகழ்வுக்காக அனைவரும் சிறப்பாக தயாராகி வருகிறோம். இதுவே அவர் ஓய்வு பெற சரியான தருணமாக இருக்கும். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறார்.

எல்லா வீரர்களுக்கும் ஒருநாள் விடைபெறும் தருணம் வரும். அது போன்ற நாள் தான் சங்கக்காராவுக்கும் வந்திருக்கிறது. சரியான இடத்தில், சரியான தருணத்தில் அவர் ஓய்வு பெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கண்டிப்பாக இந்த நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக இருக்கப் போகிறது. நாங்கள் தயாராகி வருகிறோம். எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்காத ஒன்று சங்கக்காராவுக்கு கிடைத்திருக்கிறது.

அவர் கிரிக்கெட்டில் நல்ல நிலையில் இருக்கும் போதே ஓய்வு பெறுகிறார். சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜெயவர்த்தனே கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.

SHARE