சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் சிதைந்துபோன கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஆண் மற்றும் சிறுவன் ஒருவன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் புரட்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி ஆசாத்தின் படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் 6 குழந்தைகள் உட்பட 15 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொதுமக்கள் மற்றும் மீட்புபடையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆண் ஒருவரும் சிறுவன் ஒருவனும் இடிபாடுகளில் சிக்கியிருந்ததை அவர்கள் அறிந்தனர். பின்னர் பத்திரமாக இருவரையும் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |