கத்தி மற்றும் துப்பாக்கியுடன் ஹோட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்

291
எகிப்தில் ஆயுதங்களுடன் ஹொட்டலில் புகுந்து தாக்குதல் இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
எகிப்தின் கடற்கரை நகரமான ஹர்காடாவில்(Hurghada) பெல்லா விஸ்டா என்ற ஹோட்டல் அமைந்துள்ளது.

இந்நிலையில் கத்தி, துப்பாக்கி மற்றும் ஐ.எஸ், அமைப்பின் கொடி ஆகியவற்றோடு இரண்டு தீவிரவாதிகள் ஹொட்டலினுள் புகுந்தனர்.

பின்னர் ஐ.எஸ். கொடியை உயர்த்தி பிடித்தவாறு அங்கிருந்த சுற்றுலா பயணிகளை கத்தியால் தாக்க தொடங்கினர்.

மேலும் அங்கிருந்த பெண் பயணி ஒருவரை பிணையக்கைதியாக பிடித்த தீவிரவாதி அவரது கழுத்தில் கத்தியை வைத்துள்ளார்.

உடனடியாக சுதாரித்துகொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார், மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

அவர்களிடமிருந்து,கத்தி,துப்பாக்கி, குரான், ஐ.எஸ்.அமைப்பின் கொடி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீவிரவாத தாக்குதலில் 3 சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE