கப்பல் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து வழியைப் பாதுகாப்பதில் இலங்கையுடன் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆய்வு செய்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி காலியில் உள்ள இலங்கையின் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்துக்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் கடற்படையின் போர்க்கப்பல்களையும் பார்வையிட்டார். மேலும், காலி துறைமுகத்தை அமெரிக்கத் தூதுவர் படகில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்து வழியை பாதுகாப்பதில் இலங்கையின் கடற்படையின் உதவியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்தும், அவர் கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.