கலாம் சமாதியில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ: கலாம் போன்ற உருவம் தெரிந்ததால் பரபரப்பு!

307
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் சமாதியினை இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், அப்துல் கலாம் அமர்ந்துள்ளது போன்ற தோற்றம் தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த மக்கள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உடல், ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்னும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.அவரது சமாதியை காணவும், அவருக்கு அஞ்சலி செலுத்தவும் தினமும் சுமார் 10 ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர்.இந்திலையில் சமூக வலைதளங்களில் கலாம் சமாதி தொடர்பான புகைப்படம் ஒன்று வலம் வருகிறது.

இரவு நேர வெளிச்சத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த படத்தில், கலாமின் சமாதி அருகே ஒரு உருவம் தெரிகிறது.

அந்த உருவம் பார்ப்பதற்கு கலாம் போன்றே இருப்பதாக பேசப்படுகிறது.

தற்போது வேகமாக பரவி வரும் அந்த புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE