கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட நபர்

291
பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் நபர் ஒருவர் இரத்தக்கறைகளோடு உயிருக்கு போராடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டின் Campos dos Goytacazes நகரில் வசித்து வந்த குடும்பத்தினர், தங்களது உறவினர் கல்லறைக்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றுள்ளனர்.

அப்போது. கல்லறை ஒன்று சிறிய அளவில் திறந்து கிடந்துள்ளது, அதனை சென்றுபார்த்தபோது, மனிதர் ஒருவர் ரத்தகாயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார், அந்நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனனர்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், இந்நபரை கொலை செய்யும் முயற்சியில் அடித்து கல்லறைக்கு போட்டுள்ளனர் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் சிரியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

SHARE