காணாமல்போன இரு இளைஞர்களும் சடலமாக மீட்பு

265

 

பாணந்துறை கடற்கரையில் நீராட சென்று காணாமல் போன இரு இளைஞர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாணந்துறை கடற்கரையில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர்.

ஏனைய இருவரும் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஒருவரின் சடலம் பாணந்துறை – கல்வெட்டிமோதர பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய இளைஞரின் சடலம் வாத்துவ கடற்கரையில் கரையொதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் காப்பாற்றப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் தற்போது பாணந்துறை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE