காதல் தோல்வி: பேஸ்புக்கில் பதிவிட்டு பின்னர் யுவதி தற்கொலை

285

 

காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தெவிமி என்ற குறித்த யுவதி இளைஞன் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்விளைஞர் யுவதியின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து அவ் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை அவரது நண்பர்களே வெளியிட்டுள்ளனர்.

தற்கொலை முடிவுக்கு முன்னர் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுச்சென்றுள்ளார். மரணத்தின் பின்னர் அனைவரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என அவ் யுவதி தெரிவித்துள்ளார்.

SHARE