காலஞ்சென்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கல்கிசை கலாபுரயில் அமைந்துள்ள இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், திருமதி தேவிகா மிஹிராணி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார். திருமதி ஜயந்தி சிறிசேன அவர்களும் இதில் கலந்துகொண்டார்