கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல்!

334
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது தந்தை கிரண்பால் சிங்கிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் புவனேஷ்வரின் வீடு இருக்கிறது. இங்கு நிலம் வாங்குவதற்காக ரூ.80 லட்சத்திற்கு ரன்வீர்சிங் என்பவரிடம் அவரது தந்தை கிரண்பால் பேரம் பேசியிருந்தார்.

இதன்படி பேசிய தொகையை இணையவங்கி மூலமாக அவருக்கு செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ரன்வீர்சிங் நிலத்தை அவரது பெயருக்கு எழுதி கொடுக்கவில்லை.

மேலும், கொடுத்த பணத்தை கிரண்பால் திருப்பி கேட்ட போதும், அவர் கொடுக்க மறுத்துள்ளார். ரன்வீர்விங் தற்போது ஒரு கொலை வழக்கில் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் பணத்தை திருப்பி கேட்ட கிரண்பால் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு தன் அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிரண்பால் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE