கிளிநொச்சியில் மே தின நிகழ்வுகள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் கொடி அசைத்து ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

289

 

கிளிநொச்சியில் வட மாகாண கூட்டுறவாளர்களின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் டிப்போச்சந்தி கூட்டுறவாளர் மண்டபத்தை சென்றடைந்தது.

1 5

வட மாகாண விவசாய மற்றும் கூட்டுறவாளர் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் கொடி அசைத்து ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு அமைப்புகளும் இணைந்து கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மே தினத்தை நடத்தியிருந்தனர்.

இந்த ஊர்வலத்தில் பல்வேறு கருத்துக்களை தாங்கிய ஊர்த்தி பவணியும் இடம்பெற்றது.

மே தின நிகழ்வில் வட மாகாண கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டுறவாளர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 (1) 3 (1) 4 (1)

SHARE