கிளிநொச்சியைத் தொடர்ந்து கொழும்பில் பாரிய தீ விபத்து!

262

 

வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 6 தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விபத்து தொடர்பில் காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை இதேவேளை தீ ஏனைய கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE